மட்டக்களப்பு தனியார் பேருந்து தரிப்பிட நிலையத்தை மட்டக்களப்பு மாவட்ட வீதி போக்குவரத்து அதிகார சபைக்கு ஒப்படைக்கும் நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் பின் மக்களுக்கு தெளிவு படுத்தும் நோக்குடன் தனியார் பேருந்தினை செலுத்திச் சென்று மக்களுக்கு கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா ஜகம்பத் விழிப்புணர்வை வெளிப்படுத்தினார்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் பெறும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அனுமதிப்பத்திரம் இல்லாமல் இயங்கும் பேருந்துகள் தொடர்பாக சாரதி நடத்துனர்கள் மகஜர் ஒன்றை கிழக்கு மாகாண ஆளுனரிடம் கையளித்தனர். குறித்த விடயம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் உத்தரவளித்துள்ளார்.
இலங்கையில் விவசாயிகளுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை சில ஊடகங்கள் இதை பெரிதாக காட்டுவதாகவும் ஊடகங்கள் இவ்வாறான விடயங்களில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் மக்களை குழப்புகின்ற நடவடிக்கையில் ஊடகங்கள் செயல்படக் கூடாதென கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா ஜகம்பத் கேட்டுக்கொண்டார்.