மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் சிவப்பு வலயமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர்
மட்டக்களப்பு கல்லடி வேலூர்,சின்ன ஊறணி,திருச்செந்தூர் ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகள் முடக்கப்படுவதாகவும்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 2 மரணங்கள், 66 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.