மட்டக்களப்பில் விசேட தேவையுடைய
மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கல்

0
134

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள விசேட தேவையுடைய மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சுயதொழில் ஊக்குவிப்புக்கான விவசாய உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு வை.எம்.சி.எ நிறுவனம் சி.பி.எம் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் சூழல் தொகுதியை பாதுகாப்பதற்கும் மற்றும் வாழ்வாதாரங்களை பாதுகாப்பதற்குமான
சமூக அடிப்படையிலான உள்வாங்கல் அபிவிருத்தி நடைமுறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 8 பிரதேச செயலக பிரிவில் வாழ்கின்ற விசேட தேவையுடைய மாற்றுத் திறனாளிகளுக்கான வாழ்வாதார மேம்பாட்டு உதவி திட்டங்கள் ,பொருளாதார சுயதொழில் வீட்டுத்தோட்ட விவசாய ஊக்குவிப்பு திட்டங்கள் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கான விவசாய குளங்களையும் புனர்நிர்மாணம் செய்யும் நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றனர்

அந்தவகையில் தற்போதைய பொருளாதார நெருக்கடியான சூழ் நிலையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் வாழ்கின்ற விசேட தேவையுடைய மாற்றுத் திறனாளிகளில் தெரிவு செய்யப்பட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளின் சுயதொழில் ஊக்குவிப்புக்கான வீட்டுத்தோட்ட விவசாய உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு வை.எம்.சி.எ நிறுவனத்தின் பதில் பொதுச்செயலாளர் எஸ்.பெற்றிக் தலைமையில் நடைபெற்ற சுயதொழில் ஊக்குவிப்புக்கான விவசாய உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வில்
வை.எம்.சி.எ.நிறுவன திட்ட உத்தியோகத்தர் எஸ் பி.அலெக்ஸ் ,மாற்றுத்திறனாளி அமைப்பின் தலைவர் அன்புமாறன், வை.எம்.சி.எ.நிறுவன நிதி முகாமையாளர் டி கவிதா,வை.எம்.சி.எ நிறுவன உத்தியோகத்தர்கள்,மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர்.