மட்டக்களப்பு ஓட்டமாவடியில், உலக வங்கியின் நிதியுதவியில், புதிய விற்பனைக் கூடம்

0
128

மட்டக்களப்பு ஓட்டமாவடியில், சுற்றுலாத்துறை மற்றும் பொழுதுபோக்கினை மையமாகக் கொண்ட விற்பனைக் கூடமொன்று, கிழக்கு மாகாண
ஆளுநரால் நேற்றுமாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்,
பாராளுமன்ற உறுப்பினர் அலிசாகீர் மௌலானா ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் பொது நிர்வாகம் உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால், உலக வங்கியின் நிதி உதவியுடன்
இவ் விற்பனைக்கூடம் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.