31 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தியில் தொடர்ந்து பி.சி.ஆர் பரிசோதனைகள்

மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுடன் நெருங்கிய உறவுகளுக்கு சுகாதார வைத்திய அதிகாரிகளால் பி.சி.ஆர். பரிசோதனைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இதுவரையில் 42 நபருக்கும், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்குமாக வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மொத்தம் 43 நபர்களுக்கு கொரோணா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்களுடன் தொடர்புகளை வைத்திருந்தவர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் என்ற அடிப்படையில் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவினரால் விபரங்கள்; திரட்டப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் வாழைச்சேனை முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் கடந்த மாதம் 23ம் திகதி ஜும்ஆ தொழுகையில் முதலாவது கொரோனா தொற்று என அடையாளம் காணப்பட்ட நபர்கள் கலந்து கொண்டதால் குறித்த ஜும்ஆ தொழுகையில் கலந்து கொண்ட நபர்கள் சுயதனிமைப்படுத்தலில் வைக்கப்பட்ட நிலையில் அவர்களில் இருநூறு பேருக்கு இன்று பி.சி.ஆர். பரிசோதனை மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.பி.முகைதீன் தெரிவித்தார்.

குறித்த பி.சி.ஆர். பரிசோதனை நிகழ்வில் சுகாதார வைத்திய அதிகாரிகளான வைத்தியர் எஸ்.ரீ.நஜீப்கான், வைத்தியர் எம்.பி.முகைதீன், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள், மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், தாதிய சகோதரி, அலுவலக உத்தியோகத்தர்கள், பொலிஸார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles