மட்டக்களப்பு திராய்மடு பகுதியில் மூன்று
குடும்பங்களுக்கு குழாய் கிணறு நீர் திட்டங்கள்

0
194

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திராய்மடு பகுதியில் குடிநீருக்கு மிகவும் கஸ்டங்களை எதிர்நோக்கிவந்த மூன்று குடும்பங்களுக்கு குழாய் கிணறு நீர் திட்டங்கள் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் பொருளாளர் கணபதிப்பிள்ளை துரைநாயகத்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது குடும்ப உறவினர்களின் நிதியுதவியுடன் குழாய்கிணறு நீர் விநியோக திட்டங்கள் அமைத்துக்கொடுக்கப்பட்டது.

சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண கிளையின் தலைவரும் முன்னாள் பிரதிக்கல்விப்பணிப்பாளருமான மு.விமலநாதனின் மேற்பார்வையில் சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண கிளையின் செயலாளர் றொமிலா செங்கமலனின் ஒருங்கிணைப்பில் குழாய் கிணறு குடிநீர் விநியோக திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண கிளையின் செயலாளர் றொமிலா செங்கமலன் ஒருங்கிணைப்பில்; நடைபெற்ற இந் நிகழ்வில் சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண கிளையின் தலைவரும் முன்னாள் பிரதிக்கல்விப்பணிப்பாளருமான மு.விமலநாதன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்துவைத்தார்.

சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தினால் தொடர்ச்சியாக பல்வேறு உதவித்திட்டங்கள் கிழக்கில் வழங்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.