29 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டக்களப்பு மண்முனை தென் மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அபிவிருத்தி திட்டம்

ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உருவான நாட்டில் ஒரு இலட்சம் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்தல் எனும் வேலைத் திட்டத்திற்கமைய மட்டக்களப்பு மாவட்ட மண்முனை தென் மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிட்குடப்பட்ட மண்முனை – கொக்கட்டிச்சோலை பிரதான வீதி, கடுக்காமுனை மயான வீதி என்பன தலா ஒரு கிலோமீற்றர் நீளத்தில் கொங்கிறீட் வீதியாக மாற்றியமைக்கும் வேலை திட்டத்தினை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

நீண்ட காலமாக குன்றும் குளியுமாக காணப்பட்ட சுமார் இரண்டு கிலோமீற்றர் வீதிகளே இராஜாங்க அமைச்சரின் முயற்சியினால் இவ்வாறு கொங்கிறீட் வீதியாக மாற்றியமைக்கப்படவுள்ளது.

ஐந்து கோடியே இருபது இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அமையப்பெறவுள்ள இவ்வீதிகளுக்கான ஆரம்ப கட்ட வேலைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்விற்கு இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாண பணிப்பாளர் வ.கலைவாணி மற்றும் முற்போக்கு தமிழர் அமைப்பின் பிரதிநிதிகள் பொதுமக்களென பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தனர்.

அதேவேளை தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் கடுக்காமுனை கிராமத்தில் அமைக்கப்பட்ட வீடு ஒன்றினை பயனாளியிடம் ஒப்படைத்ததுடன், அம்பிளாந்துறை மேற்கு கிராம சேவகர் பிரிவிற்கான குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான ஆரம்பக் கட்ட பணிகளையும் இராஜாங்க அமைச்சர் ஆரம்பித்து வைத்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles