31.3 C
Colombo
Thursday, April 25, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டு.ஏறாவூர் நகர சபையின் இறுதி அமர்வு நேற்று இடம்பெற்றது

உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சிக் காலம் முடிவடையவுள்ள நிலையில், மட்டக்களப்பு ஏறாவூர் நகர சபையின் இறுதி அமர்வு நேற்றைய தினம்
நகர பிதா எம்.எஸ். சுபைர் தலைமையில் இடம்பெற்றது.
இறுதி அமர்வின்போது, மட்டக்களப்பு – ஏறாவூர் புன்னக்குடா வீதியில் அமைந்துள்ள சந்தைக் கட்டடத்தை மக்கள்
பாவனைக்குக் கையளிப்பதற்கு சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டது.
ஏறாவூர் நகர சபையின் இறுதி அமர்வின் போது, சபை நடவடிக்கையின் இடைநடுவில் பிரதித்தவிசாளர் அப்துல் வாசித் சபைக்குத் தலைமை வகித்தார்.
அத்துடன் சபையின் மூத்த உறுப்பினரான யு.ஏ. றசீதுக்கும் சற்று நேரம் சபைக்கு தலைமை
தாங்கும் பொறுப்பு தவிசாளரினால் வழங்கப்பட்டது.
இச்சபை அமர்வு இறுதியானதாக அமைந்ததனால் உறுப்பினர்கள் பரஸ்பரம் முகமன்கூறி, கடந்த காலங்களில் வெளியிடப்பட்ட கருத்துக்களினால் எவருக்காவது மனக் கசப்புக்கள் இருந்தால் மன்னித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதையும் அவதானிக்க முடிந்தது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles