மட்டு.புதிய காத்தான்குடி பரீட் நகரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெற்றோல் மீட்பு

0
365

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடியில் பல சரக்கு கடையொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 160 லீற்றல் பெற்றோலை காத்தான்குடி பொலிசார் இன்று காலை கைப்பற்றியுள்ளனர்;.

காத்தான்குடி பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறியின் ஆலோசனையின் பேரில் காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி வை.விஜயராஜ் தலைமையில் சென்ற பொலிசார் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெற்றோலை கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்தர்கள் இருவர் குறித்த வர்த்தக நிலையத்தில் பெற்றோல் வாங்கியதையடுத்து பொலிசார் நடாத்திய தேடுதலின் போது கொள்கலன்களில் பெற்றோல் பதுக்கி வைத்தமையை கண்டுபிடித்தனர்.

பல சரக்கு விற்பணை நிலையத்தின் உரிமையாளரை கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை, குறித்த வர்த்தக நிலைய உரிமையாளர் பெற்றோலை அதிக விலைக்கு விற்பணை செய்துள்ளமையும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட பெற்றோலையும் கைது செய்யப்பட்ட நபரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.