மட்டு.மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் சர்வதேச விருதுக்கு தெரிவு

0
275

மட்டக்களப்பு மண்முனை தென் எருவில்பற்று, களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம் ‘முன்மாதிரியான பெண் தலைமைத்துவ ‘ சர்வதேச விருதுக்கு தெரிவாகியுள்ளார்.

நிறுவனமானது உடன் இணைந்து வருடாந்தம் சர்வதேச ரீதியாக பல பிரிவுகளின் கீழ் சிறந்த பெண்மணிகளை தெரிவுசெய்து கௌரவித்தது வருகின்றது.

அதனடிப்படையிலே களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் ‘முன்மாதிரியான பெண் தலைமைத்துவ’ சர்வதேச விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதனை முன்னிட்டு பிரதேச செயலாளரை கௌரவிக்கும் நிகழ்வு இன்று காலை பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் சத்யகௌரி தரணிதரன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் த.நிர்மலராஜ், கணக்காளர் விக்னராஜா, நிர்வாக உத்தியோகத்தர் தவேந்திரன் மற்றும் அலுவலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், என தமது வாழ்த்துக்களை தெரிவித்த அதேவேளை, பிரதேச செயலாளர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார் .