26.9 C
Colombo
Thursday, December 7, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டு.மயிலம்பாவெளி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் சாதனைபடைத்த மாணவர்கள்,சமூக செயற்பாட்டு ஊக்குவிப்பாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு

சாதனைப்படைத்த மாணவர்கள் மற்றும் சமூக செயற்பாட்டு ஊக்குவிப்பாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு மயிலம்பாவெளி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் நடைபெற்றது

பாடசாலை மட்டம் ,வலய மட்டம் ,மாகாண மட்டத்தில் நடாத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகள் , தமிழ்த்தின போட்டிகளில் பங்குபற்றி வெற்றிபெற்ற மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் , உயர்தர பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் , விவசாய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களையும் மற்றும் சமூக செயற்பாட்டு ஊக்குவிப்பாளர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் கே.பாஸ்கரன் தலைமையில் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் நடைபெற்றது

பாடசாலை ,ஆசிரியர்கள்,மாணவர்கள் , பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் பாடசாலை சமூகம் என பலரின் ஒத்துழைப்புடன் சிவன் அருள் அறக்கட்டளை அனுசரணையில் நடைபெற்ற சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வில் சாதனைபடைத்த மாணவர்களுக்கு பதக்கங்களும் ,சான்றிதழ்களும் ,பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு பதக்கங்களும் விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதேவேளை சமூக பணிகளை முன்னெடுத்து வரும் சமூக செயற்பாட்டாளர்களும் ,மயிலம்பாவெளி பிரதேசத்தில் சிறந்த அன்னை என பலராலும் பாராட்டப்படுகின்ற தாய் ஒருவரும் பொன்னாடைபோர்த்தி கௌரவிக்கப்பட்டார்

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலயக் கல்விப்பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் ,சிறப்பு அதிதிகளாக ஏறாவூர் பற்று கோட்டக்கல்விப் பணிப்பாளர் டி .ராஜமோகன் கோறளைப்பற்று உதவி திட்டமிடல் பணிப்பாளர் இ.கங்காதரன் , ,கௌரவ அதிதியாக கே .துரைராஜா ,விசேட விருந்தினர்களாக
செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் வி புவிதாசன் , மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் , கல்லூரி அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் , கல்லூரி பழைய மாணவர்கள், பாடசாலை சமூகம் என பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை சாதனை படைத்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் குறித்த நிகழ்வில் டான் தொலைக்காட்சி ஊடகவியலாளரை பாடசாலை அதிபர் ,பாடசாலை பழைய மாணவர்கள் , பாடசாலை சமூகத்தினரினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Related Articles

மட்டக்களப்பு சில்லிக்கொடியாறு பகுதியில், இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு கொக்கட்டிசோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சில்லிக்கொடியாறு பகுதியில் உள்ள வாய்க்காலிலிருந்து இளம் குடும்பஸ்தர்ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.குறித்த பகுதியை சேர்ந்த 33 வயதுடைய கிருஸ்ணபிள்ளை ரதன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சடலமாக மீட்கப்பட்ட...

காட்டு யானைகளின் தொல்லையில் இருந்து பாதுகாப்பு தாருங்கள்- மட்டக்களப்பு இலுப்படிச்சேனை மக்கள் ஆர்ப்பாட்டம

மட்டக்களப்பு - செங்கலடி பிரதேச செயலாளர் பிரவுக்குட்பட்ட இலுப்படிச்சேனை பகுதி மக்கள் காட்டு யானைத் தொல்லைக்கு தீர்வு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இன்று இலுப்படிச்சேனைப் பகுதியில் குறித்த ஆர்ப்பாட்டமானது இடம்பெற்றது.இலுப்படிச்சேனை-வேப்பவெட்டுவான் பிரதான...

ஜ.சி.சி சிறந்த வீரர்கள் பட்டியலில் முஹமது ஷமி

சர்வதேச கிரிக்கெட் சபை (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கெளரவித்து வருகிறது. அதன்படி நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

மட்டக்களப்பு சில்லிக்கொடியாறு பகுதியில், இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு கொக்கட்டிசோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சில்லிக்கொடியாறு பகுதியில் உள்ள வாய்க்காலிலிருந்து இளம் குடும்பஸ்தர்ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.குறித்த பகுதியை சேர்ந்த 33 வயதுடைய கிருஸ்ணபிள்ளை ரதன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சடலமாக மீட்கப்பட்ட...

காட்டு யானைகளின் தொல்லையில் இருந்து பாதுகாப்பு தாருங்கள்- மட்டக்களப்பு இலுப்படிச்சேனை மக்கள் ஆர்ப்பாட்டம

மட்டக்களப்பு - செங்கலடி பிரதேச செயலாளர் பிரவுக்குட்பட்ட இலுப்படிச்சேனை பகுதி மக்கள் காட்டு யானைத் தொல்லைக்கு தீர்வு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இன்று இலுப்படிச்சேனைப் பகுதியில் குறித்த ஆர்ப்பாட்டமானது இடம்பெற்றது.இலுப்படிச்சேனை-வேப்பவெட்டுவான் பிரதான...

ஜ.சி.சி சிறந்த வீரர்கள் பட்டியலில் முஹமது ஷமி

சர்வதேச கிரிக்கெட் சபை (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கெளரவித்து வருகிறது. அதன்படி நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய...

யாழில் தத்திகளின் தாக்கத்தினால் நெற் செய்கை பாதிப்பு

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதிகளில், நெற் செய்கையில், தத்திகளின் தாக்கம் அதிகரித்துள்ளதாக, யாழ்ப்பாண மாவட்ட விவசாய திணைக்கள உதவிப் பணிப்பாளர் ஸ்ரீரங்கன் அஞ்சனாதேவி தெரிவித்துள்ளார்.

தொல்பொருள் சார்ந்த அமைச்சர், இனவாத செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக சாணக்கியன் எம்.பி குற்றச்சாட்டு

தொல்பொருள் சார்ந்த அமைச்சர், இனவாத செயற்பாடுகளையே மேற்கொண்டு வருகின்றார் எனவும், நீதிமன்றத்தை அவமதித்த அமைச்சருக்கு எதிராக, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.