28.1 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மன்னாரில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

மன்னாரில், விற்பனைக்கு தயாராக இருந்த நிலையில், ஆயிரத்து 200 போதை மாத்திரைகளுடன், நேற்று, இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நானாட்டான் பிரதேசத்தை சேர்ந்த 23 வயதான பெண்ணும், 45 வயதான ஆணும், இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் குற்றப் புலனாய்வு பிரிவினர் மற்றும் கடற்படை அதிகாரிகளால், சிலாவத்துறை, நானாட்டான் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டன.

அதனையடுத்து, சந்தேக நபர்கள் இருவரும், கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகளுடன், சிலாவத்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles