மன்னாரில், மரணிப்போரின் இறுதி அஞ்சலிக்காக அமைக்கப்பட்ட புதிய மண்டபம் திறப்பு

0
184

மன்னாரில், மரணிப்போரின் இறுதி அஞ்சலிக்காக அமைக்கப்பட்ட புதிய மண்டபம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மன்னாரில், மரணிப்போரின் இறுதி அஞ்சலிக்காக, மன்னார் நகர சபையினால் அமைக்கப்பட்ட புதிய அஞ்சலி மண்டபம், வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளதாக, மன்னார் நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ் தெரிவித்துள்ளார். மன்னார் நகர சபையின், 6.9 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில், அஞ்சலி செலுத்துவதற்கான பொது மண்டபம், மன்னார் பொது சேமக்காலை பகுதியில் அமைக்கப்பட்ட நிலையில், கடந்த சனிக்கிழமை மதியம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மரணித்தவர்களை, வீட்டில் வைத்து இறுதி நிகழ்வு செய்ய வசதியற்றவர்கள், மண்டபத்தை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், அஞ்சலி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இலங்கையில், முதன் முதலாக, சபையின் நிதி ஊடாக மயானத்தில் அமைக்கப்பட்ட மண்டபமாக, இது அமைகிறது.
இந்த அஞ்சலி மண்டபத்தை, நகர சபையின் அனுமதியுடன் யாரும் பயன்படுத்த முடியும். இவ்வாறான நிலையில், மரணிப்போரின் இறுதி அஞ்சலிக்காக மண்டபம், மன்னார் நகர சபை தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில், மன்னார் நகர சபை உறுப்பினர்கள், செயலாளர், சபை உத்தியோகத்தர்கள் ஆகியோரின் பங்குபற்புடன், மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.