மன்னார் பஸார் பகுதியில் பொலிஸ் வாகனம் மோதி சிறுமி உட்பட மூவர் காயம்

0
242

மன்னார் பஸார் பகுதியில் இன்று(20) செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உட்பட மூன்று பேர் காயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (20) காலை 9.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மன்னார் பிரதான பாலத்தினூடாக மன்னார் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தவர்களும், மன்னார் பஸார் பகுதியூடாக பயணித்த பொலிஸாரின் வாகனமும் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 67 வயதுடைய கணவன், மனைவி மற்றும்அவர்களுடன் வருகை தந்த 6 வயது சிறுமி ஆகியோர் காயங்களுக்கு உள்ளான நிலையில் உடனடியாக மக்களின் உதவியுடன் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதோடு, குறித்த பொலிஸ் வாகனத்தை ஓட்டி வந்த பொலிஸ் சாரதியிடம் மன்னார் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.