மழைக்காலத்தில் வெள்ளத்தில் மூழ்கும் மருதமுனை 65 மீற்றர் சுனாமி மீள்குடியேற்றக் கிராம மக்களின் பாதுகாப்பு கருதி கல்முனை மாநகர சபையால் துரித கதியில் வடிகான்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இப்பிரதேச மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வருகின்ற வெள்ள அனர்த்த பிரச்னைக்கு தீர்வு காணும் பொருட்டு இங்கு 05 முக்கிய இடங்களில் வடிகான்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின் ஊடாக இப்பிரதேசத்தில் உள்ள அனைத்து வடிகான்களும் இணைக்கப்பட்டு வடிகான் கட்டமைப்பு முழுமைப்படுத்தப்படவுள்ளது.
இந்த வடிகான் நிர்மாணப் பணிகளை கல்முனை மாநகர சபை ஆணையாளர் என். எம். நௌபீஸ் பார்வையிட்டார்.
இதன்போது வேலைத் திட்டத்தை துரிதமாக நிறைவு செய்யுமாறு அவர் அறிவுறுத்தினார்.
இதன்போது, கல்முனை மாநகர சபையின் உதவி ஆணையாளர் ஏ. எஸ். எம். அஸீம், பொறியியலாளர் ஏ. ஜே. ஏ. எச். ஜெளசி, கணக்காளர் வை. ஹபீபுல்லாஹ், வேலைகள் அத்தியட்சகர் பி. ரி. எம். நஹீம், தொழில் நுட்ப உத்தியோகத்தர் எம். சுகுமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
மழைக்காலங்களில் வெள்ளத்தில் மூழ்கித் தத்தளிக்கும் மருதமுனை 65 மீற்றர் கிராமத்தின் நீண்ட காலப் பிரச்னைக்கு கல்முனை மாநகர சபை மிகவும் கரிசனையுடன் தீர்வைப் பெற்றுத் தந்திருப்பதையிட்டு இப்பகுதி மக்களும் நலன் விரும்பிகளும் மாநகர ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.