உழவர்கள் தமக்கு உணவளித்த இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி கூறுவது தொன்றுதொட்டு வந்த மரபாகும். இந்த மரபினை போற்றும் வகையில் சமயத்திற்கும் இயற்கைக்கும் முக்கியத்துவமளித்து நாளை மலர உள்ள தைப்பொங்கல் திருநாளை கொண்டாடுவதற்கு மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.
மலையகப்பகுதிகளிலும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தைப்பொங்கலினை கொண்டாடுவதற்கு மலையக மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.
தைத்திருநாளினை ஒட்டி பூஜை பொருட்களையும், அத்தியாவசிய பொருட்களையும் பொங்கல் செய்வதற்கான புதுப்பானை போன்றவற்றினை மக்கள் ஆர்வமாக கொள்வனவு செய்வதனை காணக்கூடியதாக இருந்தது. ஹட்டன் தலவாக்கலை, நோர்வூட், பொகவந்தலா, மஸ்கெலியா உள்ளிட்ட நகரங்களில் பொங்கல் வியாபார நடவடிக்கைகள் களைகட்டியுள்ளன.