மலையக சமூகத்தை மாற்றக் கூடிய வல்லமை உள்ளவர்களாக மலையக மாணவர்கள் மாற வேண்டும்!

0
288

மலையக மாணவர்கள், சிறந்த கல்வியை பெறுவதன் மூலமே, சமூகத்தில் நல்ல பயனுள்ள மனிதர்களாக மாற்றம் பெற முடியும் என, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மத விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளர் எஸ்.சந்ரு பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மலையக மாணவர்களின் கல்வி மேம்பாட்டு கருதி, மாணவர்களின் பயன்பாட்டிற்காக, போட்டோ பிரதி இயந்திரம் மற்றும் புத்தக பைகள் வழங்கும் நிகழ்வு, ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட, ஹட்டன் குயில்வத்தை தமிழ் மாகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற வேளை, இவ்வாறு குறிப்பிட்டார்.
நான், இந்த இடத்தில் பேசுவதற்கு காரணம், உங்களை போன்று சிறந்த முறையில் கல்வி கற்றதனால்தான்.
ஆகவே, இவ்வாறு பலர் உருவாக வேண்டும் என்ற எண்ணத்தில், நாங்கள் கல்வி மேம்பாட்டுக்காக பல உதவிகளை செய்து வருகிறோம்.
அதனை பெற்று, நீங்களும் இந்த சமூகத்திற்கு, பயனுள்ள மனிதர்களாக மாற வேண்டும்.
இன்று கடுமையான பாதைகளை கடந்து வந்தவர்கள்தான், உலகில் பல சாதனைகளை படைத்துள்ளனர்.
மலையகத்தில், இன்று கலை பட்டதாரிகள் அதிகமாக உள்ளனர்.
அதனை இட்டு நாங்கள் சந்தோசமடையும் அதேவேளை, எதிர்காலத்தில், சமூகத்தில் மாற்றத்தை ஏறபடுத்தக் கூடிய அரசியல் பொருளாதார துறைகளில், நாம் விருத்தி காண வேண்டும்.
இன்றைய சூழ்நிலையில், தொழிட்பத்தினுடாக நாம் வர்த்தக துறையில் தேடி நுழைய வேண்டும்.
அப்போதுதான், எம்மை நாம் உயர்த்திக்கொள்ள முடியும்.
ஹட்டன் பகுதியில், பல பிரபல பாடசாலைகள், பொறியியலாளர்கள், மருத்துவர்கள் போன்ற துறைகளுக்கு மாணவர்களை அனுப்பி வைத்த போதிலும், முழு மலையகத்தை பொருத்தமட்டில், அது போதுமானதாக அல்ல.
ஆகவே, நீங்கள் எங்களுக்கு செய்யும் உதவி, சிறந்த முறையில் கல்வியை பெற்று, இந்த சமூகத்தை மாற்றக் கூடிய வல்லமை உள்ளவர்களாக மாற வேண்டும் என பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளர் எஸ்.சந்ரு பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
குயில்வத்தை தமிழ் மாகா வித்தியாலய அதிபர் எம்.வேல்முருகன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மத விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளரும், சர்வதேச இசைக் கல்விக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கைத் தூதுவரும், அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றிய தலைவருமான வண பிதா எஸ்.சந்ரு பெர்னாண்டோ, அதிதியாக பங்கேற்றார்.
ஹட்டன் பிரதேச பொலிஸ் அதிகாரி, வேர்ல்ட் விஷன் ஸ்ரீ லங்காவின் செயற்றிட்ட முகாமையாளர் மனோஜ் ஜூட் தவராஜா ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும்,
ஹட்டன் ஹைலன்ஸ் தேசிய பாடசாலை ஆசிரியர்களான டீ.ஜஸ்டீன் செல்வகுமார், என்.முருகானந்தன் மற்றும் மத விவகாரங்களுக்கான செயலாளரின் நுவரெலியா மாவட்ட இணைப்பாளர் ஏ.டீ.முரளி, நோர்வூட் பிரதேச சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.நிசாரியேஸ் ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.
இதன் போது, மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.