மாகாண மட்ட சித்திர போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாணவி!

0
9

முல்லைத்தீவு குமுழமுனை மகா வித்தியாலயத்தில் தரம் ஒன்றில் கல்வி கற்கும் மயூரன் ஆருதி என்ற மாணவி மாகாண மட்ட சித்திரம் வரைதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று பாடசாலைக்கும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

மாகாண மட்ட ஆரம்ப பிரிவுக்கான சித்திரம் வரைதல் போட்டி நேற்று யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையில் இடம்பெற்றது.
இதன் போது முதலாமிடத்தை பெற்ற மாணவி மயூரன் ஆருதிக்கும் மாணவியை நெறிப்படுத்திய ஆசிரியர் திருமதி ஜெயசீலன் விமலாதேவிக்கும், பாடசாலை சமூகம் வாழ்த்து தெரிவித்துள்ளது.