27 C
Colombo
Tuesday, October 3, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

மாவீரர் நாளை அனுஷ்டிக்க அனுமதி கிடைத்தால் சுரேன் ராகவனுக்கு செல்வம் அடைக்கலநாதன் ஆதரவு

அரசியல் கைதிகள் தொடர்பில் கவனம் செலுத்துவதாகத் தெரிவிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன், மாவீரர் நாளை அனுஷ்டிக்கவும் அனுமதியைப் பெற்றுத்தந்தால், அவரின் செயல்பாடுகள் அனைத்துக்கும் ஆதரவு வழங்கத் தயார் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

சுரேன் ராகவன் அரசியல் கைதிகள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

‘முன்னாள் வடமாகாண ஆளுநர் பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன், கருத்தொன்றை வெளியிட்டுள்ள நிலையில் அரசியல் கைதிகள் விடுதலை என்பது எல்லோருக்கும் சாதாரண விடயம் போல் தெரிகின்றது.

சுரேன் ராகவன் சுதந்திரக் கட்சியோடு தற்போதும் இருப்பவர். அக்கட்சியின் தலைவரான மைத்திரிபால, ஜனாதிபதியாக இருக்கின்றபோது கிளிநொச்சியில் ஆனந்த சுதாகரனின் விடுதலை சம்பந்தமாக வாக்குறுதியளித்து சென்றிருந்தார். ஆனால் தற்போது வரைக்கும் அவரின் விடுதலையும் நடக்கவில்லை. இதன்போது சுரேன் ராகவன் எங்கிருந்தார்.

அவர் அப்போதே ஜனாதிபதியோடு பேசி, தாயை இழந்த அந்தக் குழந்தைகளின் தந்தையை விடுதலை செய்திருக்க முடியும். தற்போதும் கூட அந்தக் கட்சி அரசாங்கத்துடன் இணைந்திருக்கின்றது.

அந்தக்கட்சியின் அமைச்சுப் பதவிகளையும் பெற்றுள்ளனர். இந்நிலையில் நீதி அமைச்சருக்கு அவர்களை விடுதலை செய்ய அதிகாரமில்லை. ஆகவே அவருக்கு கடிதம் எழுதுவதை விட ஜனாதிபதியிடம் தற்போது அதிகாரம் குவிந்து கிடக்கின்றது. அந்த அதிகாரத்தை குவித்துக் கொடுப்பதில் சுரேன் ராகவனும் உடந்தையாக இருந்துள்ளார். எனவே அவர் ஜனாதிபதியுடன் பேசி அரசியல் கைதிகளின் விடுதலையை பெற்றுத்தந்தால் நாங்கள் வரவேற்போம்.

அரசியல் நோக்கத்துக்காக நீதி அமைச்சரிடம் நியாயம் கேட்பது அர்த்தமற்றது. எனவே ஜனாதிபதியுடன் கலந்துரையாடி அரசியல் கைதிகளின் விடுதலையை உறுதிப்படுத்த முனைப்பு காட்ட வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பாராளுமன்றத்தில் அரசியல் கைதிகள் தொடர்பில் விவாதத்தை மேற்கொண்டிருக்கின்றது. அப்போது இதே அரசாங்கத்தில் உள்ளவர்கள் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லையென்றே தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் அதிகாரமில்லாத நீதி அமைச்சரிடம் சுரேன் ராகவன், எமது இளைஞர்களின் விடுதலை தொடர்பில் கேட்பதை விட ஜனாதிபதியிடம் பேசி விடுதலையைப் பெற்றுத் தந்தால் நாங்களும் எங்கள் மக்களும் மட்டற்ற மகிழ்ச்சியடைவதோடு நன்றி சொல்ல கடமைப்படுவோம்.

அதனை விடுத்து எமது அரசியல் கைதிகளை விடுதலை செய்யப்போகின்றேன் எனப் பாசாங்கு காட்டக்கூடாது என்பதனை தெரிவித்துக்கொள்கின்றேன்.
அத்துடன் ஒரு கோரிக்கையை சுரேன் ராகவனிடம் முன்வைக்க விரும்புகின்றேன்.

அதாவது, அரசியல் கைதிகள் எமது விடுதலைப்போராட்டத்தில் ஏதோ ஒரு தியாகத்தை செய்தே இன்று சிறையில் வாடுகின்றனர்.

அந்தவகையில் தமது உயிரை இந்த மண்ணுக்காக தியாகம் செய்த போராளிகளது நினைவு நாள் நவம்பர் 27 ஆம் திகதி வரவுள்ளது. எனவே எமது மக்கள், தமது உள்ளக்கிடக்கைகளையும் சோகத்தையும் வெளிப்படுத்தும் நாளினை அனுஷ்டிப்பதற்கான அனுமதியைப் பெற்றுத்தந்தால் நாங்கள் உங்களுக்கு பின்னால் அணிதிரளத் தயாராகவுள்ளோம்.

அத்துடன் இவ்விரு செயல்பாட்டையும் ஜனாதிபதியுடன் பேசி செயல்படுத்தித் தந்தால், சுரேன் ராகவனின் அனைத்துச் செயல்பாட்டுக்கும் எனது ஆதரவை வழங்குவேன்’ என அவர் தெரிவித்தார்.

Related Articles

ஆறு மாத கைக்குழந்தை இறப்பு – தாய் கைது

ஆறுமாத கைக்குழந்தையை அடித்துக் கொன்றதாக கருதப்படும் 21 வயதான தாயொருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஊருபொக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஊருபொக்க கட்டுவன பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே...

மதுபோதையில் முச்சக்கர வண்டியை செலுத்திச் சென்ற சாரதி பொலிஸ் கான்ஸ்டபிள் மீது கத்தியால் தாக்குதல்!

பொலிஸ் கான்ஸ்டபிளை கத்தியால் தாக்கிக் காயப்படுத்திய மதுபோதையில் முச்சக்கரவண்டியைச் செலுத்திச் சென்ற சாரதியை அலுபோமுல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர். மதுபோதையில் முச்சக்கரவண்டியைச் செலுத்திச் சென்ற  சாரதி...

2023 க.பொ.த உயர்தர பரீட்சை : புதிய திகதி தொடர்பான அறிவிப்பு !

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர  உயர்தரப் பரீட்சைக்கான திகதி அடுத்த சில நாட்களில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த பாராளுமன்றில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

ஆறு மாத கைக்குழந்தை இறப்பு – தாய் கைது

ஆறுமாத கைக்குழந்தையை அடித்துக் கொன்றதாக கருதப்படும் 21 வயதான தாயொருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஊருபொக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஊருபொக்க கட்டுவன பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே...

மதுபோதையில் முச்சக்கர வண்டியை செலுத்திச் சென்ற சாரதி பொலிஸ் கான்ஸ்டபிள் மீது கத்தியால் தாக்குதல்!

பொலிஸ் கான்ஸ்டபிளை கத்தியால் தாக்கிக் காயப்படுத்திய மதுபோதையில் முச்சக்கரவண்டியைச் செலுத்திச் சென்ற சாரதியை அலுபோமுல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர். மதுபோதையில் முச்சக்கரவண்டியைச் செலுத்திச் சென்ற  சாரதி...

2023 க.பொ.த உயர்தர பரீட்சை : புதிய திகதி தொடர்பான அறிவிப்பு !

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர  உயர்தரப் பரீட்சைக்கான திகதி அடுத்த சில நாட்களில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த பாராளுமன்றில்...

யாழில் நீதிமன்றங்களில் சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சட்டத்தரணிகள் இன்றையதினம் ...