முல்லைத்தீவு செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் இன்றையதினம் அனுஷ்டிப்பு!

0
109

முல்லைத்தீவு வள்ளிபுனம் – இடைக்கட்டு பகுதியில் கடந்த 2006 ஆம் ஆண்டு செஞ்சோலை வளாகத்தில் விமானப்படையினரின் வான் தாக்குதலில் உயிரிழந்த சிறுவர்களின் நினைவேந்தல் நிகழ்வு இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

கடந்த 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி செஞ்சோலை வளாகத்தில் விமானப்படையினால்; நடத்தப்பட்ட வான் தாக்குதலில் உயிரிழந்த 53 சிறுவர்கள் மற்றும்; பணியாளர்கள் உட்பட 61 பேரினதும் 18ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வான் தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் தாக்குதல் இடம்பெற்ற நேரத்தில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த உறவுகளுக்கு சுடரேற்றி அக வணக்கம் செலுத்தி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அஞ்சலி நிகழ்வில் வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.குகன் பொதுமக்கள் சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.