29 C
Colombo
Friday, September 29, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

மேய்ச்சல் தரை விவகாரம்: ஆளுநர் எடுத்த தீர்மானம் ஏற்றுக் கொள்ள முடியாது!- கருணாகரன் MP

மட்டக்களப்பு மாவட்ட மயிலன்தனை மாதனை  மேய்ச்சல்
தரை விவகாரம் தொடர்பாக அமைச்சர் சமல்ராஜபக்ஷ தலைமையிலான குழு அமைத்து இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வைக் காண்பதற்காக உருவாக்கப்பட்ட குழுவையும் அமைச்சரையும்; அவமதித்து கிழக்கு மாகாண ஆளுநர் எடுத்திருக்கும் தீர்மானம் ஏற்றுக் கொள்ள முடியாது என அமைச்சர் சமல் ராஜபக்ஷவுக்கு சுட்டிக் காட்டியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கண்ணகிஅம்மன் ஆலய வீதியில் அமைந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரனின் காரியாலத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மாவட்டத்தில் மேய்ச்சல்
தரை பிரச்சனை பெரிய பிரச்சனை உருவெடுத்துள்ளதுடன் பேசும் பொருளாக மாற்றப்பட்டுள்ளது. ஏறாவூர்பற்று பிரதேச செயலப் பிரிவின் கீழ் உள்ள மயிலத்தனை மாதனை மேச்சல்தரை பிரதேசத்துக்குள் திட்டமிட்டு அயல் மாவட்ட சிங்கள மக்களை கொண்டுவந்து சேனைப் பயிர் செய்கை என்ற பேர்வையிலே ஒரு குடியேற்ற நிகழ்வை நிகழ்த்திக் கொள்வது வேதனைக்குரிய விடயமாகும்.

கடந்த 21 ம்திகதி ஒக்டோபர் மாதம் மகாவலி அபிவிருத்தி அமைச்சர் சமல் ராஜபக்ஷவை பாராளுமன்றத்திலே நானும் எனது சக பாராளுமன்ற உறுப்பினரும் சந்தித்து கலந்துரையாடலின் அடிப்படையில் 23 ம் திகதி சமல் ராஜபக்ஷவின் அலுவலகத்தில் வடக்கு கிழக்கைச் சோந்த கூடுதலான பாராளுமன்ற உறுப்பினர்களும். அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பொது ஜன பெரமுனை 3 பாராளுமன்ற உறுப்பினர்களும் பொலநறுவையைச் சேர்ந்த மகாவலி அதிகாரசபையின் இராஜாங்க அமைச்சர் சிறிபால சம்பத் மகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் ,செயலாளர் உட்பட அதிகாரிகள் கலந்துரையாடியதன் நிமிர்த்தம் இந்த மயிலத்தனை மேச்சல் தரை பிரச்சனைக்கு தீர்வு காணப்படமுடியாத இடத்தில் இந்த மாதம் 2ம் திகதி வெலிகந்தை மகாவலி காரியாலயத்தில் காலை 9 மணிக்கு கூட்டம் நடாத்துவதாகவும் அந்த குழுவிலே 4 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் அம்பாறையில் 3 பொதுஜன பொரமுனை உறுப்பினர்களும் பொலநறுவை மாவட்டத்தில் இராஜங்க அமைச்சர் சிறிபால சம்பத், அம்பாறை மட்டக்களப்பு அரசாங்க அதிபர்கள் மற்றும் ஏறாவூர்பற்று கிரான் பிரதேச செயலாளர்கள் மகாவலி அதிகாரசபை பணிப்பாளர் உட்பட ஒரு குழுவை அமைத்து பிரச்சனைக்குரிய மயிலத்தனை மடு பிரதேசங்களுக்கு நேரடியாக சென்று அந்த குழு ஒரு தீர்கமான முடிவை எடுக்கவேண்டும் என்ற ரீதியிலே அமைச்சர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

அந்த வகையில் நாட்டில் நடைபெறும் அசாதாரண சூழ்நிலையில் நேற்று முன்தினம் 2ம் திகதி வெலிகந்தையில் நடைபெற இருந்த கூட்டம் தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளது என அறிய கிடைத்தது. இருந்தும் கடந்த மாதம் 29ம் திகதி வியாழக்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் சம்மந்தப்பட்ட பிரதேசங்களுக்கு விஜயம் செய்து அதன் பின்னர் 30ம் திகதி ஊடகங்களுக்கு 500 ஏக்கர் நிலத்தை சேனைப்பயிர் செய்கைக்காக கொடுக்க இருப்பதாக தெரிவித்திருந்தார்.

சம்மந்தபட்ட அமைச்சுக்கு பொறுப்பான அமைச்சரின் தலைமையிலே நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு முரனாக அமைச்சரினால் ஏற்படுத்தப்பட்ட குழு 2ம் திகதி கூடுவதற்கு முன்னதாக கிழக்கு மாகாண ஆளுறர் தன்னிச்சையாக அப்படி ஒரு தீர்மானத்தை எடுத்திருப்பதானது வேதனைக்குரிய விடயம்.

ஒரே நாடு ஒரே சட்டம் என ஜனாதிபதி கூறியிருக்கும் இந்த வேளையில் சம்மந்தப்பட்ட அமைச்சரினால் கூட்டப்பட கூட்டத்தையும் அவரினால் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வைக் காண்பதற்காக உருவாக்கப்பட்ட அந்த குழுவையும் உதாசீனம் செய்து அமைச்சரையும் அந்த குழுவையும் அவமதித்து ஆளுநர் எடுத்திருக்கும் தீர்மானம் ஏற்றுக் கொள்ள முடியாது.

அந்த அடிப்படையில் நேற்று உடனடியாக அமைச்சர் சமல் ராஜபக்ஷ ,இராஜாங்க அமைச்சர் சிறிபால சம்பத், மகாவலி அதிகாரசபை ஜெனரல் ஆகியோருக்கு இந்த பிரச்சனைக்கு சம்மந்தப்பட் அமைச்சார் சமல் ராஜபக்ஷ தலையிட்டு அவரினால் உருவாக்கப்பட குழு மீண்டும் கூடி ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கும்வரை அந்த பிரதேசத்தில் நடைபெறும் சேனைப்பயிர் செய்கையை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு நான் வேண்டி கடிதங்கள் அனுப்பியுள்ளேன். எனவே அமைச்சர் சமல் ராஜபக்ஷ முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கின்றது என்றார்.

Related Articles

மட்டக்களப்பு வெல்லாவெளி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் பயன்தரும் பழமரக்கன்றுகள் நடப்பட்டது

மட்டக்களப்பு வெல்லாவெளி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் பயன்தரும் பழமரக்கன்றுகள் ஆலைய அறங்காவல் சபை மற்றும் பொதுமக்களால் நடப்பட்டது.ஆலய வளாகத்தில் நூறு தென்னக்கன்றுகள் ஏனைய பயன்தரும் பழமரக்கன்றுகள் நடும்...

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி அச்சுறுத்தலை எதிர்நோக்கியதால் தனது பதவியை விட்டு விலகியுள்ளமை ஜனநாயக ஆட்சிமுறையை பாதிக்கின்றது- ஞா.ஸ்ரீநேசன்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி அச்சுறுத்தலை எதிர்நோக்கியதால் தனது பதவியை விட்டு விலகியுள்ளமை நாட்டின் மனித உரிமை, நீதித்துறை, மொத்தத்தில் ஜனநாயக ஆட்சிமுறையை பாதிக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற...

அம்பாறை கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி மீள்குடியேற்ற கிராமத்தில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதால் கிராம மக்கள் அச்சத்தின்

அம்பாறை கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி மீள்குடியேற்ற கிராமத்தின் மேற்கு புறத்தில் உள்ள வயல் வெளிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறன.கிராமத்தில் உள்ள சுவர்களையும், பயன்தரு மரங்களையும் நாளாந்தம் சேதப்படுத்திக்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

மட்டக்களப்பு வெல்லாவெளி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் பயன்தரும் பழமரக்கன்றுகள் நடப்பட்டது

மட்டக்களப்பு வெல்லாவெளி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் பயன்தரும் பழமரக்கன்றுகள் ஆலைய அறங்காவல் சபை மற்றும் பொதுமக்களால் நடப்பட்டது.ஆலய வளாகத்தில் நூறு தென்னக்கன்றுகள் ஏனைய பயன்தரும் பழமரக்கன்றுகள் நடும்...

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி அச்சுறுத்தலை எதிர்நோக்கியதால் தனது பதவியை விட்டு விலகியுள்ளமை ஜனநாயக ஆட்சிமுறையை பாதிக்கின்றது- ஞா.ஸ்ரீநேசன்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி அச்சுறுத்தலை எதிர்நோக்கியதால் தனது பதவியை விட்டு விலகியுள்ளமை நாட்டின் மனித உரிமை, நீதித்துறை, மொத்தத்தில் ஜனநாயக ஆட்சிமுறையை பாதிக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற...

அம்பாறை கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி மீள்குடியேற்ற கிராமத்தில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதால் கிராம மக்கள் அச்சத்தின்

அம்பாறை கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி மீள்குடியேற்ற கிராமத்தின் மேற்கு புறத்தில் உள்ள வயல் வெளிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறன.கிராமத்தில் உள்ள சுவர்களையும், பயன்தரு மரங்களையும் நாளாந்தம் சேதப்படுத்திக்...

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 150வது கல்லூரி தினம் இன்று

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 150வது கல்லூரி தின நிகழ்வு கோலாகலமாக இன்று கல்லூரியில் இடம்பெற்றது. கல்லூரி பழைய மாணவர்களின் ஏற்பட்டில் கல்லூரியின் அதிபர் அன்ரனி பெனடிக் ஜோசப் தலைமையில்...

அம்பாறை நிந்தவூரில் மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு வறிய குடும்பம் ஒன்றுக்கு வீடு கையளிக்கப்பட்டது

மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு நிந்தவூரில் வறிய குடும்பம் ஒன்றுக்கு பகுதியளவாக நிர்மானிக்கப்பட்ட வீடு இன்று அரச சார்பற்ற நிறுவனமான பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பினால் இன்று...