மேல் மாகாணத்தில் 17 ஆயிரத்து 708 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என
மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.
இந்த வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களைக் கண்காணிக்க விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேநேரம், மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 23 பொலிஸ் அதிகாரப் பிரதேசத்திலும் மக்கள் நடமாட்டத்தைக் கண்காணிக்க ஆளில்லா விமானங்களும், உலங்குவானூர்திகளும் பயன்படுத்தப்படவுள்ளன.
அத்துடன் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.