யாழ்ப்பாணம், பருத்தித்துறை – மருதங்கேணி வீதியில் குடத்தனை வலிக்கண்டி பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மின்கம்பத்துடன் மோதியே விபத்து சம்பவித்துள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த 27 வயதான பெண் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.