யாழ்ப்பாணம் குருநகரில், போயா தினத்தில், சட்டவிரோதமாக சாரய விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும், பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, குருநகர் பகுதியில் தேடுதல் நடத்தப்பட்டது.
இதன் போது, சட்டவிரோதமாக சாராய விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், ஒரு தொகுதி சாராயப் போத்தல்களும் மீட்கப்பட்டன.