உலக மண் தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் கொக்குவில் ஸ்ரீ இராமகிருஷ்ணா வித்தியாசாலை மாணவர்கள் மத்தியில், எதிர்காலத்தை நோக்கி, சுற்றுசூழல் கழகமும் பாடசாலை சுற்றாடல் கழகமும் இணைந்து, பல்வேறு போட்டி நிகழ்வுகளை நடத்திய நிலையில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா, இன்று, வித்தியாசாலை அதிபர் ம.திலீபன் தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக, முன்னாள் மத்திய கல்வி அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் க.பத்மானந்தன் பங்கேற்று, பரிசில்களை வழங்கி வைத்து, சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்வில், சிறப்பு விருந்தினராக, ஆசிரிய ஆலோசகர் ப.அருந்தவம் பங்கேற்றதுடன், கழக உறுப்பினர்கள், ஆசிரியர்கள் நலன் விரும்பிகள் என பலர் கலந்துகொண்டனர்.
Home வடக்கு செய்திகள் யாழ்ப்பாணம் கொக்குவில் ஸ்ரீ இராமகிருஷ்ணா வித்தியாசாலையில், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு