யாழ்ப்பாண லயன்ஸ் கழகமும், நல்லூர் வடக்கு சனசமூக நிலையமும் இணைந்து, வாழ்வாதார உதவியை வழங்கியுள்ளன. ஜே-257 கிராம சேவகர் பிரிவிலுள்ள, தெரிவு செய்யப்பட்ட நூறு குடும்பங்களுக்கு, வீட்டுத் தோட்டப் பயிர்கள், மரக்கன்றுகள், இயற்கைப் பசளைகள் என்பவற்றை வழங்கி வைத்துள்ளன. இந்நிகழ்வு, நல்லூர் வடக்கு சந்திரசேகர பிள்ளையார் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
லயன்ஸ் கழகத்தின் மர நடுகைக்கு பொறுப்பான மாவட்ட தலைவர் லயன் கு.ஜெயந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், மர நடுகை சம்பந்தமான விழிப்புணர்வுக் கருத்தரங்கும் இடம்பெற்றது.
பிரதம விருந்தினராக, லயன்ஸ் கழக சர்வதேச பணிப்பாளர் லயன் சுனில் வட்டவழவும், கௌரவ விருந்தினராக, லயன்ஸ் கழகத்தின் கவுன்சில் தலைவர் வைத்தியர் லயன் வை.தியாகராஜாவும், சிறப்பு விருந்தினராக, வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானமும் கலந்துகொண்டனர். இதன் போது, பயனாளிகள், லயன்ஸ் கழக உறுப்பினர்கள், நல்லூர் வடக்கு சனசமூக நிலைய உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.