யாழ்.பல்கலையில் இருந்து திலீபனின் ஊர்தி பவனி இன்று

0
205

தியாகி திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து இன்றைய தினம் ஊர்தி பவனியொன்று ஆரம்பித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான வளாகத்திலிருந்து குறித்த ஊர்தி பவனி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு பலரும் அஞ்சலி செலுத்தினர். யாழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் ஊர்தி பயணிக்கவுள்ளதுடன், நாளை காலை நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தை சென்றடையவுள்ளது.