யாழில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3600 உயர்வடைந்துள்ளது என யாழ் மாவட்ட அரச அதிபர் தெரிவித்தார்.
இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யாழ் மாவட்டத்திற்கான 2ஆம்கட்ட தடுப்பூசி எதிர்வரும் 10 ஆம் திகதியில் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம் மேலும்
நேற்று 92 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இதுவரை 48 இழப்புக்கள் பதிவாகியுள்ளன. நல்லூர் மற்றும் உடுவில் பகுதிகளில் 3 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
யாழில் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவுக்கென கிடைத்த நிதியில் 59 ஆயிரம் குடும்பங்களுக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் சிலர் அதிருப்தி அடைந்துள்ளனர். தடுப்பூசி வழங்கும் முதற்கட்ட நடவடிக்கை நிறைவடைந்துள்ளது. 49 ஆயிரத்து 577 ஊசிகள் வழங்கப்பட்டுள்ளன.
யாழ் மாவட்டத்திற்கான 2ஆம்கட்ட தடுப்பூசி எதிர்வரும் 10 ஆம் திகதியில் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம் என்றார்.