கம்பஹா, ராகம போதனா வைத்தியசாலையின் மின் உற்பத்தி இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, வைத்தியசாலையில் நேற்று இரவு சுமார் ஒரு மணித்தியாலம் வரை மின்சாரம் இன்றி நோயாளர்கள், வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியர்கள் தங்களது கையடக்கத் தொலைபேசி ஒளியைக் கொண்டு நோயாளிகளை பரிசோதிக்க வேண்டியிருந்ததாகவும், சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னரே மின்சார விநியோகம் சீரமைக்கப்பட்டதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்தார்.