29 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் இருவருக்கு கொரோனா

கொழும்பு லேடிரிட்ஜ்வே வைத்தியசாலையில் இரு கொரோனா வைரஸ் நோயாளிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வெல்லம்பிட்டியவை சேர்ந்த தாயும் இரண்டுவயது பிள்ளையும் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என கொழும்பு லேடிரிட்ஜ்வே மருத்துவமனையின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
முன்னெச்சரிக்கையாக அவர்களை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியொன்றில் அனுமதித்து பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது என தெரிவித்துள்ளஅவர் பிசிஆர் சோதனைகள் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்துள்ளன என தெரிவித்துள்ளார்.
குழந்தையின் தந்தைக்கே முதலில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மினுவாங்கொட ஆடைதொழிற்சாலை ஊழியர் ஒருவர் கலந்துகொண்ட திருமண நிகழ்விற்கு சென்றதன் காரணமாகவே தந்தை பாதிக்கப்பட்டுள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles