31 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

வடக்கு இளைஞர்களும் என்னைப்போன்று பாராளுமன்றம் வரவேண்டும் – நாமல் ராஜபக்ஷ

என்னைப்போன்று வடபகுதியிருந்தும் இளைஞர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டு அமைச்சுக்களை பொறுப்பெடுத்து அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் யாழ். மாவட்ட தலைமைக் காரியாலயத்தை இன்று (08.11.2020) திறந்து வைத்து உரையாற்றும்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: ‘கடந்த 30 வருட காலமாக நடந்த யுத்தத்தின் தாக்கம் காரணமாக வடபகுதி அபிவிருத்தி அடையாத நிலை காணப்பட்டது. எனினும் யுத்தம் நிறைவடைந்த பின்னர் தற்போது நாட்டில் சுதந்திரம் நிலவி வருகின்றது.

எனினும் தற்போதைய அரசாங்கம் வடபகுதியில் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அதிலும் குறிப்பாக விளையாட்டுத் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து நாம் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

யாழ். மாவட்டத்தில் உதைபந்தாட்டம், கிரிக்கெட் விளையாட்டுகளுக்கு மைதானங்கள் இந்த அரசாங்கத்தால் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன. அதே போன்று சர்வதேச ரீதியில் விளையாடுவதற்காக வடக்கிலிருந்தும் இளைஞர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பது எமது ஆர்வம்.

எனவே கடந்த 30 வருட காலமாக இருந்த நிலையை மறந்து நாம் அனைவரும் புதிய யுகம் நோக்கி பயணிப்பதன் மூலம் எதிர்காலத்தில் எமது நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும்’ என அவர் தெரிவித்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles