வடமராட்சியில் ஓருலைப் பொங்கல்!

0
232

யாழ்ப்பாணம், வடமராட்சி – அல்வாய் வடக்கில் ஓருலைப் பொங்கல் நிகழ்வு இடம்பெற்றது.
சமூக விஞ்ஞான ஆய்வு மையம், நாம் செய்வோம் அமைப்புடன், அல்வாய் வடக்கு மகாத்மா வீதி மக்கள் இணைந்து ஓருலை பொங்கல் நிகழ்வை நடாத்தியுள்ளனர்.
நேற்று பிற்பகல் நான்கு மணிக்கு அல்வாய் வடக்கு மாகாத்மா வீதி சந்தியிலிருந்து சிவகுரு ஆதீன குரு முதல்வர் வேலன் சுவாமிகள் தலமையில், பொங்கல் பானையுடன் வீடு வீடாக சென்று பொங்கல் பொருட்கள் சேகரிக்கப்பட்டு பிற்பகல் 5:30 மணிக்கு பொங்கல் நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில் சிவகுரு ஆதீன குரு முதல்வர் வேலன் சுவாமிகள், அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வுமைய இயக்குனருமான சி.அ.ஜோதிலிங்கம், சமூக விஞ்ஞான ஆய்வுமைய முக்கியஸ்தர்களான எஸ்.கமலகாந்தன், ஆசிரியர் பகீரதன், அல்வாய் வடக்கு மகாத்மா சனசமூக நிலைய தலைவர் எஸ்.யோகநாதன், அல்வாய் வடக்கு சிவ சுப்பிரமணிய தேவஸ்தான தலைவர், முன்பள்ளி ஆசிரியர்,
நாம் செய்வோம் அமைப்பு நடாத்தும் ஆச்சிரம கல்வி நிலைய ஆசிரியர்கள் மாணவர்கள், கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
வேலன் சுவாமிகளின் தலைமையில் பஜனையும், சுவாமிகளின் அருளுரையும் இடம்பெற்றது.