வவுனியாவில் தனியார் நிறுவனத்துக்கு சீல்வைப்பு! இன்றும் தொடரும் ஆய்வு

0
32

விவசாய உற்பத்திகள் மற்றும் உள்ளீடுகளை விற்பனை செய்துவரும் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளால் சீல்வைக்கப்பட்டது.

இந்த நிறுவனத்தில் தரமற்ற தானியங்கள் உள்ளதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் வவுனியா மாவட்ட நுகர்வோர் அதிகார சபைக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து வவுனியா ஈரற்பெரியகுளம் பகுதியில் உள்ள குறித்த நிறுவனம் அதிகாரிகளால் ஆய்வுசெய்யப்பட்டது.

இதன்போது தரமற்றவகையில் காணப்பட்ட பச்சைபயறு ஒரு தொகை மீட்கப்பட்டது.

அத்துடன் இறக்குமதி செய்யப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த திரவப்பசளை ஒரு தொகுதி கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் தரம் தொடர்பாக ஆராய்வதற்காக மாதிரிகள் பெறப்பட்டுள்ளதுடன் பரிசோதனைகள் முடிவடையும் வரை அவற்றை விற்பனை செய்ய வேண்டாம் என்று அதிகாரிகளால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டதுடன், அந்த நிறுவனம் சீல்வைத்து மூடப்பட்டது.

இதேவேளை, இன்றையதினம் குறித்த களஞ்சியத்தை சுகாதாரப் பரிசோதகர்களும் பார்வையிட்டு ஆய்வு செய்யவுள்ளனர்.

இந்த தனியார் நிறுவனம் மீதான சோதனை நடவடிக்கையின் போது மாவட்ட அரச அதிபர் பி. ஏ. சரத்சந்திர, மேலதிக அரச அதிபர் தி. திரேஸ்குமார், உரச்செயலகத்தின் பிரதிப் பணிப்பாளர் பந்துல விஜயவர்த்தன உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் சமுகமளித்திருந்தனர்.