33 C
Colombo
Saturday, April 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

வவுனியாவில் விஷேட அதிரடிப்படையினரால் மரக்கடத்தல் முறியடிப்பு

வவுனியா கருங்காலிக்குளம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடத்திச்செல்லப்பட்ட முதிரை மரக்குற்றிகளை மடுக்கந்தை விஷேட அதிரடிப்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

கருங்காலிக்குளம் பகுதியில் முதிரை மரக்குற்றிகள் கடத்தப்படவுள்ளன எனக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து நேற்று நள்ளிரவு அப்பகுதிக்குச் சென்ற மடுக்கந்தை விஷேட அதிரடிப்படையினர் மற்றும் வவுனியா வனவளத்துறை அதிகாரிகளால் இக்கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பல இலட்சம் ரூபா பெறுமதியான 8 முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டதுடன், கடத்தலுக்குப் பயன்படுத்திய ஜீப் வாகனத்தையும் கைப்பற்றியதுடன் இக்கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles