வவுனியா ஆச்சிபுரத்தில் வாள்வெட்டுத் தாக்குதல்: குடும்பஸ்தர் பலி!

0
179

வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் இன்று இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக
உயிரிழந்துள்ளார்.
இன்று மாலை அந்தப்பகுதிக்கு சென்ற ஆயுதம் தாங்கிய குழு ஒன்று உயிரிழந்த நபரைத் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் அவரது உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டு, ஒரு கையும் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பாக சிதம்பரபுரம் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை
மீட்டனர்.
ஆச்சிபுரம் பகுதியை சேர்ந்த ரஞ்சா என்று அறியப்பட்ட யோன்சன் வயது 30என்ற குடும்பஸ்தரே உயிரிழந்தவராவர்.
சடலம் சட்டவைத்தியரின் பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையின் பிரதே அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.