வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் அமைதியின்மை! ஒருவர் மருத்துவமனையில்!!

0
32

இ. போ. ச. மற்றும் தனியார் பேருந்து தரப்பினருக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டமையால் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.

இன்று காலை வவுனியாவில் இருந்து கல்முனை நோக்கிப் புறப்படத் தயாராக இருந்த இ. போ. ச. பேருந்து தரப்பினருக்கும் தனியார் பேருந்து தரப்பினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இ. போ. ச. பேருந்து புறப்படுகின்ற நேரம் தொடர்பிலேயே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

இதனால் பேருந்து நிலையப்பகுதியில் இரு தரப்புக்கும் இடையில் குழப்பநிலை ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் நிலைமையை கட்டுப்படுத்தினர்.

இதேவேளை, பேருந்து நிலையத்தில் கடமையாற்றும் போக்குவரத்துச் சபையின் நேரக்கணிப்பாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்து அவர் வவுனியா மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன்,
இ. போ. ச. பேருந்து ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.