வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்

0
78

வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் பிரதேச செயலாளர் இ.பிரதாபன் தலைமையில் நேற்று இடம்பெற்றது.
வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் கு.திலீபன், இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானும் பிரதேச திணைக்கள அதிகாரிகளும் மாவட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இதன் போது கல்வி, விவசாயம், வன வளம், கூட்டுறவு போன்ற விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.
கமக்கார அமைப்பிற்கும், விவசாயிகளுக்கும் இடையே இதன்போது முரண்பாடு ஏற்பட்ட நிலையில் அதற்கு தீர்வு காணும் வகையில் அபிவிருத்தி குழு தலைவரால் விசாரணையை மேற்கொள்ள விசேட குழு அமைக்கப்பட்டுள்ளது.