இன்றைய தினம் அதிகளவு வெப்பநிலை பதிவாகக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மனித உடலால் உணரப்படும் அளவிற்கு வெப்பநிலை அதிகரித்து காணப்படக்கூடும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வடக்கு, வட மத்திய, கிழக்கு, மேல், சபரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் மாத்தளை மாவட்டங்களின் சில இடங்களிலும் வெப்பநிலை இவ்வாறு அதிகரித்து காணப்படக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே போதுமான அளவு நீர் அருந்துவது, முடிந்தவரை நிழலில் ஓய்வெடுப்பது, கடுமையான வெளிப்புறச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவது போன்ற சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.