அக்கரைப்பற்றில் சந்தியா எக்னலிகொடவினால் போராட்டம் முன்னெடுப்பு!

0
178

கடத்திக் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியாஎக்னலிகொட அம்பாறை அக்கரைப்பற்றில் போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட 2010 ஜனவரி மாதம் 24ஆம் திகதி கடத்தப்பட்டு காணாமல்ஆக்கப்பட்ட தினத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்றைய தினம் அக்கரைப்பற்றுவீரகாளியம்மன் ஆலயத்திற்கு முன்பாக முடிவுக்கு வந்தது.போராட்டத்தில் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் தலைவிசெல்வராணி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் கலந்துகொண்டதுடன்,
போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பெருமளவான பெண்களும் ஆலயத்திற்கு முன்பாக கூடியிருந்தனர்.கடத்தப்பட்ட நிலையில் அக்கரைப்பற்று பகுதியில் வைத்தே தனது கணவன் படுகொலை செய்யப்பட்டதாக சந்தியா எக்னலியகொடதெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.