தீவிரவாத வன்முறைகளைத்தடுக்கும் பொருட்டு அரச உத்தியோகஸ்தர்கள், சர்வமதகுழுவினர்கள், இளைஞர் அமைப்பினர்,சமூக தேசிய ஊடகங்கள்,சிவில் சமூக அமைப்பினர் ஆகியன எவ்வாறு தமது ஒத்துழைப்பை வழங்கலாம் எவ்வாறு அவைகளை சமூகத்திலிருந்து ஒழிக்கலாம் என்பது பற்றி ஆராய்ந்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்கும் செயலமர்வு அக்கரைப்பற்று மாநகர சபை மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
தீவிரவாத வன்முறைகளால் மக்களிடையே ஏற்படும் அசௌகரியங்கள்,அமைதியின்மை,மனஉளைச்சல்,போன்றவைகள் தொடர்பாக செயலமர்வில் கலந்து கொண்டோர் தமது சுதந்திரமான கருத்துகளைத் தெரிவித்தனர்.
இறுதியில் இவர்கள் மூன்று குழுக்களாகப் பிரிந்து அம்பாறை மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட மூன்று முக்கியவிடயங்கள் எடுக்கப்பட்டு அம்மூன்று விடயங்களும் சமூகத்தில் எவ்வாறு தாக்கத்தையும் அமைதியின்மையையும் ஏற்படுத்தின என்றும் குழுக்களின் தலைவர்கள் விளக்கியயதோடு மக்களுக்கு உண்மையைப்புரிந்துகொள்ள ஊடகங்களை பாவிக்கவும் வீதி நாடகங்களை நடாத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
;நிகழ்வில் கலந்து கொண்ட இலங்கை தேசிய சமாதான சபையின் திட்டப்பணிப்பாளர் சாவ்பிநயாஜ் இந்த மூன்று விடயங்களில் மிகவும் முக்கியமான ஒன்றைத் தெரிவுசெய்து இம்மாவட்டத்தில் அதனை நிகழ்வுக்குப் பொருத்தமான இடத்தைத்தெரிவு செய்து மிகவும் சிறப்பாக நடாத்த எல்லா ஒழுங்குகளும் மேற்கொள்ள வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது .
அம்பாறை மாவட்ட சர்வமதக்குழுவின் தலைவர் ஐ.எல்.ஹாசிம் தலைமையில் இலங்கை தேசிய சமாதான சபையினரால் அட்டாளைச்சேனை அபிவிருத்தி சமூகத்தின் அனுசரணையில் ஒழுங்குசெய்யப்பட்ட இந்தச்செயலமர்வில் அரச உத்தியோகஸ்தர்கள், சர்வமதகுழுவினர்கள், இளைஞர் அமைப்பினர், சமூக தேசிய ஊடகங்களில் அங்கம் வகிப்போர் ,சிவில் சமுகஅமைப்பினர் போன்றோர் கலந்துகொண்டு தமது ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவித்தனர்.