அக்கரைப்பற்று மன்பஉல் ஹைராத் அரபிக்கல்லூரி அக்கரைபற்று பிரதேச செயலகத்துடன்துடன் இணைந்து நடாத்திய’ இளைஞர் யுவதிகளை
வலுவூட்டும்’ திட்டத்திற்கு அமைவாக ஒழுங்கு செய்யப்பட்ட பத்துநாள் வதிவிட செயலமர்வை பூர்த்தி செய்த மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவம் இன்று அரபிக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
க பொத.சாதாரணதர பரீட்சியை எழுதிய மாணவிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதகளிளிருந்தும் இச்செயலமர்வில் கலந்துகொண்டனர்.
செயலமர்வில் மாணவிகளுக்கு கல்வி வழி காட்டி, கணணி தொடர்பான அறிவு, தேசப்பற்று நாட்டுக்கான பங்களிப்பு, சூழல் பாதுகாப்பு, வீட்டு தோட்ட ஆலோசனைகள், இஸ்லாமிய விழுமியங்கள், ஆரோக்கியமான குடும்பம், போதைவஸ்து அதன் தாக்கம், போன்ற விடயங்கள் குறித்த விளக்கவுரைகள் வழங்கப்பட்டது.
கல்லூரி ஆளுநர் சபை தலைவர் எம்.எச்.அபூதாகிர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாகக் அக்கரைற்று பிரதேச செயலாளர் அஷ்-ஷேய்க் ரீ.எம்.முஹம்மத் அன்சார். கலந்து கொண்டதுன், அக்கறைப்பற்று உதவி அரசாங்க அதிபர் எ.கே. ரோசின் தாஜ்,கல்லூரி அதிபர் மௌலவி ,ர்ஷாத் உதவிக்கல்விப் பணிப்பாளர் எம்.எம்சி திபாத்திமா, ஆயிஷா மகளிர் கல்லூரி அதிபர் என்.ஹாருதீன் மற்றும் வளவாளர்கள் கலந்துகொண்டு உரையாற்றியதோடு சான்றிதல்களையும் வழங்கினர்