அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலை மற்றும் பனங்காடு பிரதேச வைத்தியசாலைகளுக்கு தேவையான 40ஆயிரம் வில்லைகள் பொதியிடும் பக்கற்றுக்களை பனங்காடு பட்டிநகர் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய நிருவாகத்தில் வழங்கப்பட்டுள்ளது.
ஆலய வண்ணக்கர் உள்ளிட்ட நிருவாகத்தினரால் வைத்தியசாலை நிருவாகத்திடம் வில்லை பொதியிடும் பக்கற்றுகள் கையளிக்கப்பட்டதுடன் வைத்தியசாலை நிருவாகம் ஆலய நிருவாகத்திற்கு நன்றி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆலயத்தின் தலைவரும் வண்ணக்கருமான க.கார்த்திகேசு தலைமையில் இடம்பெற்ற வில்லை பொதியிடும் பக்கற்றுகள் வழங்கும் நிகழ்வில் ஆலய பொருளாளர் கே.பி.ராஜஸ்ரீ உள்ளிட்டவர்களும் பங்கேற்றிருந்தனர்.