அக்கரைப்பற்று சின்னக்குளம் ஸ்ரீP வீரம்மாகாளியம்மன்; ஆலய வருடாந்த அலங்காரத் திருச்சடங்கு திருவிழாவின் பாற்குடபவனி பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்புடன் நடைபெற்றது.அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ப.கு.கேதீஸ்வரக்குருக்களின் தலைமையிலான பூஜை வழிபாடுகளோடு ஆரம்பமான பாற்குடபவனியில் வீரம்மாகாளியம்மன் ஆலய தலைவர் பி.பிராசந்தன் மற்றும் ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலய தலைவர் வி.சுகிர்தகுமார் உள்ளிட்ட ஆலய அறங்காவலர்கள் உற்சவகாலகுரு உற்சாடனபானு சிவத்திரு இ.யோகானந்தம் உதவிக்குருமார்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வம்மியடிப் பிள்ளையாருக்கான விசேட பூஜைகள் இடம்பெற்றதுடன் பாற்குடவபனி பக்தர்களின் ஆரோகாரா எனும் வேண்டுதலுக்கு மத்தியில் பாற்குடபவனி நடைபெற்றது. கணபதி ஹோமம் மற்றும் திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமான திருச்சடங்கானது எதிர்வரும் 05ஆம் திகதி அதிகாலை இடம்பெறும் தீமிதிப்புடனும், 12ஆம் திகதி இடம்பெறும் எட்டாம் சடங்குடனும் நிறைவுறும்.
ஆலய தலைவர்; பி.பிராசந்தன் தலைமையில் வருடாந்த அலங்காரத் திருச்சடங்கினையும் ஆலய வழிபாட்டு பிரதான கிரியைகள் யாவற்றையும் ஆலய பிரதமகுரு க.சிவராசா, உற்சவகாலகுரு சிவத்திரு இ.யோகானந்தம் உள்ளிட்ட பிரதம குருமார்களும் உதவி பூசகர்களும் நடாத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.