அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயத்தில் இன்று மஹாயள பட்ச கிரியைகளும் விசேட
பூஜை வழிபாடுகளும் பிதுர் தர்ப்பணமும் இடம்பெற்றது.ஒவ்வொரு ஆண்டும் அமாவாசை திதியின் போது மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது இந்து மதத்திதனரின் பாரம்பரியமாகும். இந்த திதி கொடுக்க ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் மஹாளய அமாவாசை சிறப்பானது. அதிலும் மஹாளய அமாவாசை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
மஹாளய பட்சம் புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு மறுநாள் பிரதமை திதியில் தொடங்கி புரட்டாசி மாத அமாவாசை வரை நீடிக்கும். இந்நாளில் மறைந்த முன்னோர்களை நினைத்து தர்ப்பணம், அன்னதானம் போன்றவற்றை செய்யும் போது அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ள பித்ரு லோகத்திலிருந்து பூமிக்கு வருவதாக நம்பப்படும் அதேவேளை, அவர்களை நினைத்து நாம் செய்யும் தர்மசெயல்கள் அவர்களுக்கு மகிழ்வளிக்க கூடியதாகவும் .அவர்களின் பரிபூரண ஆசி நமக்கு கிடைக்கும் என்பது இந்துக்களின் ஜதீகம்.இதற்கமைய ஆலயத்தில் இடம்பெற்ற பிதுர்கடன் நிறைவேற்றும் கிரியைகளில் பெருந்திராளனவர்கள் கலந்து கொண்டு இறந்தவர்களின் ஆத்ம சாந்தி வேண்டிய தர்ப்பணம் மற்றும் பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.
ஆலயத்தில் இடம்பெற்ற கிரியைகளில் கலந்து கொண்டவர்கள் கடலில் நீராடி வேண்டுதலை நிறைவு செய்ததுடன் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டு அன்னதானத்திலும் இணைந்து கொண்டனர்.இடம்பெற்ற மஹாயள பட்ச கிரியை மற்றும் வழிபாடுகளை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ க.குமுதேஸ்வர சர்மா மற்றும். கு.சீ.கௌரிசங்கர் குருக்கள் ஆகியோர் நிறைவேற்றினர்.