அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையிலும் சிறப்பு நிகழ்வுகள் மற்றும் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
பாடசாலையின் சமய குழுவினரின் ஏற்பாட்டில் பிரதி அதிபர் ஜயந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகளில் உதவி அதிபர் மதியழகன் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
பாடசாலையின் முன்பாக நிறுவப்பட்டிருக்கும் சுவாமி விவேனகானந்தரின் திருவுருவச் சிலைக்கு பிரதி அதிபர் மற்றும் உதவி அதிபர் ஆகியோர் மலர் மாலை அணிவித்தனர். இதன் பிற்பாடு தேவாரம் பாடப்பட்டு மங்கள ஆராத்தியும் காண்பிக்கப்பட்டது.
இங்கு சுவாமி விவேகானந்தர் தொடர்பான உரையினை மாணவி ஒருவர் வழங்கியதுடன் அவருக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
நிறைவாக சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு தொடர்பில் ஓய்வு நிலை ஆசிரியர் கமலநாதன் மாணவர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார்.