அச்சுவேலியில் நூதனமான முறையில் தொலைபேசி திருட்டு!

0
146

அச்சுவேலியில் நூதனமான முறையில் தொலைபேசி திருட்டு!

அச்சு வேலி பத்தை மேனி பகுதியில் இன்று காலை ஊனமுற்றவர்களுக்கு நிதி சேகரிப்பதாக சென்ற ஒருவர்  பத்தைமேனி பகுதியிலுள்ள வீடுகளுக்கு  சென்று நிதி சேகரித்துள்ளார்

 அதேபோல முதியவர் வசிக்கும் வீடொன்றுக்கும் குறித்த நபர் சென்ற போது அனுசரித்த முதியவர்100 ரூபா  நிதிப்பங்களிப்பை வழங்கிய போது இது காணாது சற்று அதிகமாக  தாருங்கள் என500 ரூபாய் பணத்தினை வாங்கியிருந்தார் பின்னர் 

 குடிப்பதற்கு கொஞ்சம் தண்ணீர் தாருங்கள் என கேட்க முதியவர்வீட்டு க்குள்ளே சென்றபோது முதியவரின் 50 ஆயிரம்  ரூபா பெறுமதியான கைத்தொலைபேசியை அபகரித்து சென்றுள்ளார்,

குறித்த விடயம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது