அச்சுவேலியில் இராணுவ மரியாதையுடன் உடல் நல்லடக்கம் இடம்பெற்றது
அச்சுவேலி தெற்கு பகுதியில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த இராணுவ வீரரின் இறுதிக்கிரியை பூரண இராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
நாகரத்தினம் விவேக் வயது (29) என்ற இராணுவ சிப்பாய் நேற்று அதிகாலை மாரடைப்பினால் உயிரிழந்திருந்தார். இறுதிக்கிரியைகள் இன்றைய தினம் இடம்பெற்றது. குறித்த இராணுவ வீரர் கடந்த 2014ஆம் ஆண்டு இராணுவத்தில் இணைந்து மின்னணு பொறியியல் பிரிவில் கடமையாற்றி வந்திருந்தார். நேற்று முன்தினம் அவர் கிளிநொச்சியில் உள்ள இராணுவ முகாமில் இருந்து, விடுமுறையில் வீட்டுக்கு வந்தநிலையில் நேற்று அதிகாலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுஜுவ செனரத் யாப்பா உட்பட இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தி இருந்தனர். இதன்போது இருபத்தியோரு வேட்டுக்கள் தீர்க்க இராணுவ வீரரின் உடல் அச்சுவேலி தெற்கு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.