அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் பற்சிகிச்சை நிலையம் திறந்துவைப்பு!

0
240

அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் இயங்கி வரும் பற்சிகிச்சை நிலையம் நீண்ட காலமாக வசதிகள் அற்ற நிலையில் இயங்கி வந்த நிலையில் குறித்த பற்சிகிச்சை நிலையத்தை யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் இன்று திறந்து வைத்தார். மக்கள் நல்வாழ்வு மையத்தின் 16 இலட்சம் ரூபா நிதி உதவியில் இதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. இதன் மூலம் அச்சுவேலி மற்றும் அதனை அண்மித்த பல கிராம மக்கள் நன்மையடையவுள்ளனர். இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆறுமுகம் கேதீஸ்வரனும், சிறப்பு விருந்தினராக யாழ் போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் பி.சத்தியகுமார், அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்திய நிபுணர் பி.குணதீபன் மற்றும் திரு.மதுரமணி இராசையா மற்றும் விருந்தினர்கள் பலர் கலந்து கொண்டனர்.