அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வேண்டுதலின் பேரில், இன்று அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் இரத்த தானம் செய்யும் நிகழ்வு இடம்பெற்றது.

இளைஞர் விவகார விளையாட்டுத் துறை அமைச்சு மற்றும் தேசிய இளஞர் சேவைகள் மன்றம் ஆகியன இணைந்து, பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கான வைத்திய பொறுப்பதிகாரி டாக்கடர் பி.என். றுசையின், இளைஞர் சேவை அதிகாரி எம்.றியாத், இளைஞர் கழக சம்மேளனத் தலைவர் ஏ.எல். முகம்மட் சீத், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் எம்;ஏ. சர்பான் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள், வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக, நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள பயணத் தடை காரணமாக, வைத்தியசாலைகளில் குருதி தட்டுப்பாடு நிலவுவதால் அன்றாட சத்திரசிகிச்சைகள் மற்றும் குருதி பாய்ச்சும் அவசரத்தேவையுடைய நோயாளர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக வைத்திய அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது