மின்சார விநியோகம் மற்றும் பெற்றோலிய உற்பத்தி உட்பட பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் ஜனாதிபதி செயலாளரினால் நேற்று வெளியிடப்பட்ட இந்த வர்த்தமானி அறிவிப்பின்படி, மின்சார விநியோகம் மற்றும் பெற்றோலிய உற்பத்தி மற்றும் எரிபொருள் வழங்கல் அல்லது விநியோக சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக தொடர்ந்தும் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும்.
அவ்வாறே, வைத்தியசாலைகள், மருத்துவ மனைகள், மருந்தகங்கள் மற்றும் அதுபோன்ற ஏனைய நிறுவனங்களில் நோயாளர்களின் பராமரிப்பு மற்றும் வரவேற்பு, பாதுகாப்பு, போசாக்கூட்டல் மற்றும் சிகிச்சை அளித்தல் ஆகியவை தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய அல்லது தேவைப்படும் சகல சேவைகள், தொழில் பங்களிப்புகள் என்பனவும் அத்தியாவசிய சேவைகளாக தொடர்ந்தும் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் என அந்த விசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளன.